கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Thursday, June 14, 2012

ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்புவதாக ரூ.10 லட்சம் மோசடி: 2 பேர் கைது

கீழக்கரை,ஜூன்.14- காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் மகன் பாஸ்கரன் (வயது 32). யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெயக்குமார் என்ற சசி. இவர்களிடம் கீழக்கரை செங்கல் நீரோடை பகுதியை சேர்ந்த ஆதிமூலம் மக ன் ரமேஷ் (41), உச்சிப்புளி அருகே உள்ள கடுக்காய்வலசையை சேர்ந்த காயாம்பு மகன் மனோகரன்(49), சென்னை அகதிகள் முகாமை சேர்ந்த ராஜீவன் என்ற ராஜூ ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், ஏராளமானோரை அனுப்ப உள்ள தாகவும் தெரிவித்தனர். இதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் பணம் கொடுத் தால் ஆஸ்திரேலியா நாட்டுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பி பாஸ்கரன் தனக்கு தெரிந்த 3 பேருக்கு முன்பணமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இதேபோல ஜெயக்குமார் என்ற சசி தனக்கு தெரிந்த 9 பேருக்காக ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இருவரிடமும் மொத்தம் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெற்றுக்கொண்டவர்கள் இத் தனை ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்பி வைக்காமல் ஏமாற்றி வந்தார் களாம். இந்த நிலையில் இருவரும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது ரமேஷ் உள்ளிட்ட 3 பேரும் பணத்தை தர முடியாது என்றும், தொடர்ந்து கேட்டால் கொலை செய்து விடுவதாக வும் மிரட்டினார்களாம். இதுகுறித்து பாஸ்கரன், ஜெயக்குமார் ஆகியோர் கீழக்கரை போலீசில் புகார் செய்த னர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் இளங்கோவன், சப்- இன்ஸ்பெக்டர் கார்மேகம் ஆகியோர் வழக்கு பதிந்து ரமேஷ், மனோகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ராஜீவனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment