கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Tuesday, June 28, 2011

செய்திகள்


முகத்தில் பாதி முடியால் மூடப்பட்ட சிறுவன்
June 26, 2011

வயது எட்டு. இவர் ஒரு அபூர்வமான பிரச்சினையால் பாதிக்கப்படவர்.

இவரின் முகத்தில் ஒரு பகுதியில் கண்ணையும் மூடியவாறு கண்ணப் பகுதிவரை முடி வளருவதுதான் இவருக்கு இருந்த பிரச்சினை.

பிறப்பு முதலே இது காணப்பட்டது. நாள் செல்லச் செல்ல பிரச்சினையும் முற்றியது. பாடசாலையில் இவரை சக மாணவர்கள் கேலி செய்யாத நாட்களே இல்லை.பல பட்டப் பெயர்களும் உள்ளன.


இந்தச் சிறுவன் நான்கு வயதாக இருக்கும் போதே தந்தை மரணமாகி விட்டார். தாய் ஒரு மனநோயாளி. பாட்டன், பாட்டி தான் இவரைப் பராமரித்து வருகின்றனர்.

இவரின் நிலைமை கேள்வியுற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹுவாங் என்ற பெண் மனநோய் மருத்துவ நிபுணர் இவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இவரின் முயற்சியின் பலனாக ஜிலின் மாகாண பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை ஆஸ்பத்திரியில் இவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இவரின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும் என்று டாக்டர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment