
இப்திகார்
கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக யார் போட்டியிட போகிறார், கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிட போகிறது என்ற கேள்விக்கெல்லாம் விரைவில் விடை கிடைத்து விடும். எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை வேட்பாளரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியிட விரும்புவோர் ஒவ்வொருவரும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேட்பாளர் போட்டியில் மஹ்தூமியா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகாரும் இணைந்துள்ளார். மஹ்தூமியா சமூக நல அமைப்பின் மூலம் பல்லாண்டு காலமாக நலப்பணிகளை மேற்கொள்ளும் இவர் சென்னை புதுகல்லூரி மாணவர் பேரவையில் பொது செயலாளராக(1996) பணியாற்றி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்,சமுக சேவையில் ஆர்வமுள்ள இவர் பைத்துமால் முன்னாள் செயலாளர் மறைந்த ஏ.கே.எஸ் கபீர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையின் முதல் பெண்கள் மதரஸா நிறுவியது இவரது தாயாராகும்.
இது பற்றி அவரது தரப்பு கூறியதாவது,இப்திகாரை வேட்பாளராக போட்டியிட செய்ய முயற்சி நடப்பது உண்மைதான் இறைவனின் கிருபையால் வெற்றி பெற்றால் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்வதோடு நின்று விடாமல் சொந்த செலவில் பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்வார் என்பது உறுதி
No comments:
Post a Comment