கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Monday, February 20, 2012

மதுரையில் நடந்த 44 சோதனைக்குழாய் குழந்தைகள் சந்திப்பு நிகழ்ச்சி

மதுரை: மதுரையில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் சோதனைக்குழாய் மூலம் பிறந்த 44 குழந்தைகள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடந்தது.

மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ளது ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம். அங்கு சோதனைக்குழாய் மூலம் பிறந்த 44 குழந்தைகள் சந்தித்த நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்திரலேகா கூறியதாவது,

ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் அனைத்து நவீன கருவிகளும் உள்ளன. அதனால் குழந்தை இல்லா தம்பதிகள் எந்த பரிசோதனைக்காகவும் வெளியே செல்லத் தேவையில்லை. லேப்ரோஸ்கோபி, ஐ.யூ.ஐ., மற்றும் ஐ.வி.எப்., சிகிச்சை முறையால் மதுரை கிளையில் மட்டும் 250 தம்பதியர் குழந்தை பேறு பெற்றுள்ளனர். அதில் 36 பேருக்கு சோதனைக்குழாய் மூலம் 44 குழந்தைகள் பிறந்துள்ளன.

அந்த குழந்தைகள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட வைப்பதற்காக கூட்டு குடும்ப விழாவாக இந்நிகழச்சி நடத்தப்பட்டது. டாக்டர்கள் சுபாஷினி, சுஜிதா தலைமையில் தாய், சேய் நலப்பிரிவும், டாக்டர் மணிகண்டசாமி தலைமையில் குழந்தைகள் நலப்பிரிவும் செயல்பட்டு வருகிறது என்றார்

No comments:

Post a Comment