கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Tuesday, February 14, 2012

ஆப்கானில் நேட்டோ படைகள் தாக்குதல்: 8 குழந்தைகள் பலி


ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்திய விமான தாக்குதலில் சிக்கி 8 எட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அங்கு தலிபான்களின் தாக்குத‌லை ஒடுக்க நேட்டோ படையினர் முகாமிட்டுள்ளன. அவை பாகிஸ்தான் எல்லையிலும் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் கபீஸா மாகாணத்தின் நெஜ்ராப் மாவட்டத்தில் கியாவாலா கிராமப்பகுதியில் நேட்டோப்படையினர் திடீர் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் எட்டு குழந்தைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நோட்டோ படைகளின் இத்தாக்குதலுக்கு ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment