கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Sunday, August 12, 2012

11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

 
11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்.

1/1

சென்னை, ஆக.12 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (11.8.2012) தலைமைச் செயலகத்தில், திருவொற்றியூர் உள்பட 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். தமிழகத்தை ஒரு அறிவுசார் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதே  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும். உயர் கல்வியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  உயர் நிலைக் கல்வி அளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.  கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர் கல்வி மூலம் வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைந்து தங்களது குடும்பத்தை மேம்படுத்தி அவர்களது பொருளாதார நிலை உயரும் வகையிலும், உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது. 
இதன் அடிப்படையில், 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா 29.5.2012 அன்று ஆணையிட்டார். அதன்படி, சேலம் மாவட்டம் ​ எடப்பாடி; கன்னியாகுமரி மாவட்டம் ​ கன்னியாகுமரி; திண்டுக்கல் மாவட்டம் ​ வேடசந்தூர்; ஈரோடு மாவட்டம் ​ மொடக்குறிச்சி; மதுரை மாவட்டம் ​ திருமங்கலம்; திருவள்ளூர் மாவட்டம் ​ திருவொற்றியூர்; இராமநாதபுரம் மாவட்டம் ​ பரமக்குடி; திருநெல்வேலி மாவட்டம் ​ கடையநல்லூர்; விருதுநகர் மாவட்டம் ​ அருப்புக்கோட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் ​ நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்டம் ​ அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் புதிதாக பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாக  தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,  உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment