நீலகிரி, ஜூலை 19-
உதகமண்டலம் அருகே உள்ள போர்தியாடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு 30 வயதான பெண், கடும் இருமல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது குழந்தைகளுக்கும் அந்நோய் பரவியது. இது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக தென்பட்டதையடுத்து அந்த பெண்ணும், அவரது 3 குழந்தைகளும் உடனடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். எனவே அவரிடமிருந்து பன்றிக் காய்ச்சல் நோய் தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மல்ராஜ், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் வந்த பெண்ணின் ஊரான போர்த்தியாடா கிராமத்துக்கு விரைந்து சென்று அங்குள்ள நிலைமை பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நோய் பரவாமல் தடுக்க டாக்டர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்
உதகமண்டலம் அருகே உள்ள போர்தியாடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு 30 வயதான பெண், கடும் இருமல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது குழந்தைகளுக்கும் அந்நோய் பரவியது. இது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக தென்பட்டதையடுத்து அந்த பெண்ணும், அவரது 3 குழந்தைகளும் உடனடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். எனவே அவரிடமிருந்து பன்றிக் காய்ச்சல் நோய் தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மல்ராஜ், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் வந்த பெண்ணின் ஊரான போர்த்தியாடா கிராமத்துக்கு விரைந்து சென்று அங்குள்ள நிலைமை பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நோய் பரவாமல் தடுக்க டாக்டர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்
No comments:
Post a Comment