ராமநாதபுரம், ஜூலை 10-
ராமநாதபுரத்தை அடுத்துள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, கூலி தொழிலாளி. இவரது மகள் நந்தினி (வயது22). இவர் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த நந்தினி திடீரென்று மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் நந்தினியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தட்சிணா மூர்த்தி, தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், எனது மகளை பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரின் மகன் ஆதம் அலி கடத்தி சென்று விட்டார். எனவே அவரிடம் இருந்து எனது மகள் நந்தினியை மீட்டுதர வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நந்தினியை தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, கூலி தொழிலாளி. இவரது மகள் நந்தினி (வயது22). இவர் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த நந்தினி திடீரென்று மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் நந்தினியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தட்சிணா மூர்த்தி, தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், எனது மகளை பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரின் மகன் ஆதம் அலி கடத்தி சென்று விட்டார். எனவே அவரிடம் இருந்து எனது மகள் நந்தினியை மீட்டுதர வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நந்தினியை தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment