கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Monday, July 16, 2012

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறது பாக். கிரிக்கெட். அணி - டிசம்பரில் "பரபரப்பான" போட்டிகள்

டெல்லி: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. டிசம்பரில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டிகள் நடைபெற உள்ளன.
இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. இந்திய அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் மோத உள்ளது.
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இரண்டு அணிகளும் மோதின.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தீவிர முயற்சியால் மீண்டும் இருநாடுகளிடையேயான "பரபரப்பான" கிரிக்கெட் உறவு துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment