புதுடெல்லி, ஜூலை 16-
ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோட்டில் நடைபெற்று வருகிறது. இம்மாத துவக்கத்தில் விமானிகளின் கோரிக்கையை ஏற்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட 100 விமானிகளை மீண்டும் பணியில் சேர்ப்பதாகவும் ஏர்இந்தியா உறுதி அளித்தது.
இதையடுத்து தங்கள் போராட்டத்தை விமானிகள் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனால் நீக்கப்பட்ட விமானிகள் பணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராடும் விமானிகளை சமாதானம் செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.
ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோட்டில் நடைபெற்று வருகிறது. இம்மாத துவக்கத்தில் விமானிகளின் கோரிக்கையை ஏற்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட 100 விமானிகளை மீண்டும் பணியில் சேர்ப்பதாகவும் ஏர்இந்தியா உறுதி அளித்தது.
இதையடுத்து தங்கள் போராட்டத்தை விமானிகள் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனால் நீக்கப்பட்ட விமானிகள் பணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராடும் விமானிகளை சமாதானம் செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment