சென்னை: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் கொண்ட 64 ஒருங்கிணைந்த வளாகங்களை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
32 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 2 வீதம் ஏற்படுத்தப்படும் இந்த சிறப்பு இல்லங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் உதவியுடன் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வாழும் முதியோர்களுக்கு பாதுகாப்பினையும் நாகரிகமான, உசிதமான வாழ்க்கையையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதன் அடிப்படையில், ஜெயலலிதா பதவியேற்றவுடன் பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்.
தங்களை கவனித்துக் கொள்ள ஒருவரும் இல்லாத நிலையில், தினசரி வாழ்வில் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ தேவைகள் முதலியவற்றிற்காக மிகவும் அல்லல்படும் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளின் தேவைகளையும் நிறைவு செய்தல் அவசியமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திலும், முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை உருவாக்கவும், மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் ஒரு பகுதியாக அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தினை சிறந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியுடன் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, 2011-12ம் நிதியாண்டில் முன்னோடி முயற்சியாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 2 வட்டாரங்கள் என முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களை உள்ளடக்கிய 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா கொள்கை அளவில் முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த சிறப்பு இல்லங்களில் முதியோர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் பாசப் பிணைப்புடன் தங்களுக்குள் அன்பு, மரியாதை போன்றவற்றை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் அருகருகே வசிப்பார்கள்.
முதியோர் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்படும் இந்த வளாகங்கள் பள்ளிக் கூடங்கள், மருத்துவ வசதிகள், உடற்பயிற்சி, நூலகம் போன்ற பல வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த சிறப்பு இல்லங்களில், அபாயகரமான சூழ்நிலையில் வாழக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த 5 முதல் 18 வயதுடைய குழந்தைகள், புலம் பெயர்ந்த குடும்பங்கள் போன்ற சமூகரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தொற்றுடைய நோய் உள்ள குழந்தைகள், நிராதரவான குழந்தைகள், கைதிகளின் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கடுமையான மருத்துவ சிக்கல் உள்ள நிராதரவான முதியோர்கள் ஆகியோர் தங்க வைக்கப்படுவார்கள்.
ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றிற்கு தொடக்க தொடரா செலவினமாக ரூபாய் 2.75 லட்சமும், தொடர் செலவினமாக ரூபாய் 18.40 லட்சம் என மொத்தம் 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்திட 12 கோடியே 18 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையினால், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமன்றி அவர்களது எதிர்கால வாழ்வும் உறுதி செய்யப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Friday, December 30, 2011
நம்பர் ஒன் நா முத்துக்குமார்

2011-ம் ஆண்டில் மிக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரபல கவிஞர், பாடலாசிரியர் நா முத்துக்குமார்.
தமிழ் சினிமாவில் வாலி, வைரமுத்துவுக்குப் பிறகு, நிலையான இடத்தைப் பிடித்த இளம் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார் நா முத்துக்குமார்.
இந்த 2011-ம் ஆண்டு மட்டும் அவர் பாடல் எழுதியுள்ள படங்களின் எண்ணிக்கை 38. இவற்றில் 12 படங்களின் முழுப் பாடல்களையும் முத்துக்குமாரே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 98 பாடல்களைத் தந்துள்ளார் நா முத்துக்குமார்.
இந்த ஆண்டு ஹிட்டான அவரது பாடல்களில் முக்கியமானவை உன் பேரே தெரியாதே, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்..., கோவிந்த கோவிந்தா... (எங்கேயும் எப்போதும்), முன் அந்திச் சாரல் நீ... (7 ஆம் அறிவு), ஆரிரரோ... , விழிகளில் ஒரு வானவில்... (தெய்வத் திருமகள்), வாரேன் வாரேன்... (புலிவேசம்), விழிகளிலே விழிகளிலே... (குள்ளநரிக் கூட்டம்) போன்றவை.
அதேபோல அதிக இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவரும் முத்துக்குமார்தான்.
2012-ம் ஆண்டில் வெளியாகவிருக்கும் ஏகப்பட்ட படங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார் முத்துக்குமார். பில்லா 2, நண்பன், வேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரவான், தாண்டவம் என முக்கிய படங்களில் அவர்தான் பாடலாசிரியர். மொத்தம் 58 படங்கள் இப்போது கைவசம் உள்ளன.
கொலவெறியோடு புறப்பட்டிருக்கும் புதிய பாடலாசிரியர்களுக்கு மத்தியில் அழகான தமிழ் வார்த்தைகளுடன் அர்த்தமுள்ள பாடல்களைத் தரும் முத்துக்குமாரின் பயணம் தொடரட்டும்
கடலில் 25 அதிராம்பட்டினம் மீனவர்கள் மாயம்: புயலில் சிக்கினர்?
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 25 நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளனர். அவர்கள் புயலில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தானே புயல் காரணமாக தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தனக்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால், எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற அதிராம்பட்டினம் மீனவர்கள் 25 பேர் மாயமாகியுள்ளனர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லியப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திகேயன், ரங்கராஜன், பழனியாண்டி, நாகராஜன், முருகன் ஆகியோர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகுகளில் 25 மீனவர்கள் கடந்த 27ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் மறுநாள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை.
இதுபற்றி கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கடலில் தத்தளித்த 11 ஆந்திர மீனவர்கள்-ஹெலிகாப்டரில் கடற்படை மீட்டது:
இந் நிலையில் ஆந்திர மாநிலம், நர்சப்பூரில் இருந்து மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் புயல் பாதிப்பால் கடலில் ஏற்பட்ட கடுமையான அலைகளில் சிக்கி தத்தளித்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், அவர்களை மீட்குமாறு கடற்படையினருக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து ஹெலிகாப்டர்களில் சென்ற இந்திய கடற்படையினர் 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு வந்தனர்.
தானே புயல் காரணமாக தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தனக்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால், எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற அதிராம்பட்டினம் மீனவர்கள் 25 பேர் மாயமாகியுள்ளனர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லியப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திகேயன், ரங்கராஜன், பழனியாண்டி, நாகராஜன், முருகன் ஆகியோர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகுகளில் 25 மீனவர்கள் கடந்த 27ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் மறுநாள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை.
இதுபற்றி கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கடலில் தத்தளித்த 11 ஆந்திர மீனவர்கள்-ஹெலிகாப்டரில் கடற்படை மீட்டது:
இந் நிலையில் ஆந்திர மாநிலம், நர்சப்பூரில் இருந்து மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் புயல் பாதிப்பால் கடலில் ஏற்பட்ட கடுமையான அலைகளில் சிக்கி தத்தளித்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், அவர்களை மீட்குமாறு கடற்படையினருக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து ஹெலிகாப்டர்களில் சென்ற இந்திய கடற்படையினர் 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு வந்தனர்.
Wednesday, December 28, 2011
கோவையில் நெகிழ்ச்சி சந்திப்பு மனைவியை இழந்த நண்பருக்கு அப்துல் கலாம் ஆறுதல்

கோவை : மனைவியை இழந்த நண்பருக்கு அப்துல் கலாம் நேரில் ஆறுதல் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கல்லூரித் தோழர் சம்பத்குமார். கோவை சாய்பாபா காலனி பொன்னுசாமி நகரில் வசிக்கிறார். இவரது மனைவி சரோஜா(71), நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த 21ம் தேதி இறந்தார். இதை அறிந்த அப்துல்கலாம், நண்பருக்கு ஆறுதல் கூற நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். நேற்று காலை சம்பத்குமார் வீட்டுக்குச் சென்று, சரோஜாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அந்த போட்டோவில், ‘சரோஜா அம்மா புனிதப் பிறவி. குடும்பத்தின் அரும்பெரும் சொத்து. சம்பத் வாழ்க்கையில் அவர் ஒரு பொக்கிஷம். அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். எல்லாருக்காகவும் அவர் பிரார்த்தனை செய்வார்‘ என எழுதினார்.
பின்னர் சம்பத்குமாரின் அருகில் அமர்ந்து, அவருக்கு ஆறுதல் கூறினார். மனைவிக்கு செய்யப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். சம்பத்குமாரிடம், ‘இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். மனைவியின் பெயரில் துவக்கப்பட்டுள்ள சேவ் டாட்டர்ஸ் அமைப்பு மூலம் அதிகளவில் அனாதை குழந்தைகளுக்கு உதவுங்கள்’ என கூறினார்.
சம்பத்குமார் கூறுகையில், ‘1950ல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அப்துல்கலாம், நான், கேரளாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் ஒன்றாக படித்தோம். வெவ்வேறு மதங்களை சேர்ந்த நாங்கள் மூவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். மூவரும் நண்பர்களானோம். படித்து 62 ஆண்டுகளாகியும் அப்துல்கலாம் நட்பை மறக்கவில்லை. அவர் இன்று என்னை சந்தித்தது மிகப்பெரிய ஆறுதல். இறைவனே ஆசி கூறியதாக எண்ணுகிறேன்’ என நெகிழ்ச்சி யுடன் கூறினார்.
பெரியாறு அணை விவகாரம் மற்றொரு வாலிபர் தற்கொலை
சின்னமனூர் : முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரியாறு அணை பிரச்னை காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த 24 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. நேற்று கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூரில் 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், சின்னமனூர்&கஸ்பாரோட்டை சேர்ந்த சின்னராஜ் மகன் ராமமூர்த்தி(36) கலந்து கொண்டார். இவர் விஷ விதைகளை சாப்பிட்ட பிறகே ஊர்வலத்தில் நடந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தலைசுற்றல் எடுக்கவே உடனடியாக ராமமூர்த்தி வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் சகோதரி தமிழ்செல்வி விசாரித்தபோது, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை தீர்வு கிடைக்காததால் விஷம் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை ஆம்புலன்சில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந் தார். அவரது சட்டை பாக்கெட்டில் கலெக்டரு க்கு ஒரு கடிதம் இருந்தது. அதில் ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. இப்பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என எழுதியுள்ளார். இதனை போலீ சார் கைப்பற்றினர்.
அங்கு வந்த உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருடன் கடிதத்தை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக தற்கொலை செய்து கொண்டதாக எப்ஐஆர் பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தனர். அவரது உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தற்கொலை செய்து கொண்ட ராமமூர்த்திக்கு திருமணமாகவில்லை. இவருக்கு சகோதரி தமிழ்செல்வி, சகோதரர்கள் வேலுச்சாமி, முருகன், செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அண்ணன் வீட்டில் தங்கி பித்தளை பாத்திரங்கள் செய்யும் தொழில் செய்து வந்தார்.
உயிர் தியாகம் செய்த 2 பேர்: சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்த சேகர் என்ற தேமுதிக பேச்சாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் இதே பிரச்னைக் காக விஷம் குடித்து இறந்தார். நேற்று ராமமூர்த்தி இறந்துள்ளார். கடந்த வாரம் தேனி அருகே இதே பிரச்னைக்காக 2 பேர் தீக்குளித்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
புத்தாண்டில் புதிய அணைக்கு பூமிபூஜை?
உத்தமபாளையம்: முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து கூறி வருகிறார். புதிய அணை கட்டுவதற்கான இடத்தை ஏற்கனவே தேர்வு செய்து, நிதியும் ஒதுக்கி விட்டனர். இந்நிலையில் பூமிபூஜையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று ரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 2012 ஜனவரி 1ல் பூமிபூஜை நடத்த கேரளா திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், கேரள அரசு புதிய அணைக்கு பூமிபூஜை நடத்தினால், 2012 ஜனவரி 1ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து, புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட தேனி மாவட்டத்தின் பல்வேறு விவசாய அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்
இந்நிலையில், தலைசுற்றல் எடுக்கவே உடனடியாக ராமமூர்த்தி வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் சகோதரி தமிழ்செல்வி விசாரித்தபோது, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை தீர்வு கிடைக்காததால் விஷம் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை ஆம்புலன்சில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந் தார். அவரது சட்டை பாக்கெட்டில் கலெக்டரு க்கு ஒரு கடிதம் இருந்தது. அதில் ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. இப்பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என எழுதியுள்ளார். இதனை போலீ சார் கைப்பற்றினர்.
அங்கு வந்த உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருடன் கடிதத்தை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக தற்கொலை செய்து கொண்டதாக எப்ஐஆர் பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தனர். அவரது உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தற்கொலை செய்து கொண்ட ராமமூர்த்திக்கு திருமணமாகவில்லை. இவருக்கு சகோதரி தமிழ்செல்வி, சகோதரர்கள் வேலுச்சாமி, முருகன், செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அண்ணன் வீட்டில் தங்கி பித்தளை பாத்திரங்கள் செய்யும் தொழில் செய்து வந்தார்.
உயிர் தியாகம் செய்த 2 பேர்: சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்த சேகர் என்ற தேமுதிக பேச்சாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் இதே பிரச்னைக் காக விஷம் குடித்து இறந்தார். நேற்று ராமமூர்த்தி இறந்துள்ளார். கடந்த வாரம் தேனி அருகே இதே பிரச்னைக்காக 2 பேர் தீக்குளித்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
புத்தாண்டில் புதிய அணைக்கு பூமிபூஜை?
உத்தமபாளையம்: முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து கூறி வருகிறார். புதிய அணை கட்டுவதற்கான இடத்தை ஏற்கனவே தேர்வு செய்து, நிதியும் ஒதுக்கி விட்டனர். இந்நிலையில் பூமிபூஜையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று ரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 2012 ஜனவரி 1ல் பூமிபூஜை நடத்த கேரளா திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், கேரள அரசு புதிய அணைக்கு பூமிபூஜை நடத்தினால், 2012 ஜனவரி 1ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து, புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட தேனி மாவட்டத்தின் பல்வேறு விவசாய அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்
7 இந்தியருடன் இத்தாலி கப்பல் கடத்தல்
ரோம் : இத்தாலிக்கு சொந்தமான சரக்குக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் நேற்று கடத்திச் சென்றனர். இதில் 7 இந்தியர்கள் உட்பட 18 பேர் மாட்டிக் கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு குடியரசிலிருந்து புறப்பட்ட என்ரிகோ ஐவோலி என்ற சரக்குக் கப்பலில் 17,750 டன் காஸ்டிக் சோடா இருந்தது. நேற்று மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏறினர்.
ஆயுதங்களை காட்டி மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் சோமாலியாவுக்கு கப்பலை கடத்திச் சென்றனர். இதில் 7 இந்தியர்கள் உட்பட 18 பேர் இருக்கின்றனர். இந்த தகவலை கப்பலின் உரிமையாளர் மர்னவி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். கப்பலை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை காட்டி மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் சோமாலியாவுக்கு கப்பலை கடத்திச் சென்றனர். இதில் 7 இந்தியர்கள் உட்பட 18 பேர் இருக்கின்றனர். இந்த தகவலை கப்பலின் உரிமையாளர் மர்னவி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். கப்பலை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் மக்கள் இந்தியா வந்திருக்கும் ஜப்பான் பிரதமருக்கு கோரிக்கை

கூடங்குளம் டிச 28-
கூடங்குளம் மக்கள் இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிகிகோவுக்கு ஒரு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர் அதன் நகலை இன்று பத்திரிகையாளர்களிடம் காட்டினர் அதில் இந்தியாவுடன் ஜப்பான் சிவில் அணு ஒப்பந்த ஒத்துழைப்பு வைத்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் அதில் நாங்கள் ஜப்பான் மக்களுக்கு மதிப்பளிக்கிறோம் அவர்கள் அயரத உழைப்பும் கடமை உணர்வும் மிக்கவர்கள்.இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட ஜப்பான் நிறுவனக்கள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் நாடு ஜப்பான் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் உறவுகளை மதிக்கிறது.நாங்கள் நிச்சயமாக சிவில் அணு ஒத்துழைப்புக்கு ஜப்பான் மற்றும் யாருனும் வைப்பதற்கு பாராட்ட மாட்டோம் என கூறி உள்ளனர்
கூடங்குளம் மக்கள் இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிகிகோவுக்கு ஒரு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர் அதன் நகலை இன்று பத்திரிகையாளர்களிடம் காட்டினர் அதில் இந்தியாவுடன் ஜப்பான் சிவில் அணு ஒப்பந்த ஒத்துழைப்பு வைத்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் அதில் நாங்கள் ஜப்பான் மக்களுக்கு மதிப்பளிக்கிறோம் அவர்கள் அயரத உழைப்பும் கடமை உணர்வும் மிக்கவர்கள்.இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட ஜப்பான் நிறுவனக்கள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் நாடு ஜப்பான் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் உறவுகளை மதிக்கிறது.நாங்கள் நிச்சயமாக சிவில் அணு ஒத்துழைப்புக்கு ஜப்பான் மற்றும் யாருனும் வைப்பதற்கு பாராட்ட மாட்டோம் என கூறி உள்ளனர்
லோக்பால் விவாதத்தில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
புதுடெல்லி, டிச. 28-
பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட போதிலும் அரசியலமைப்பு சட்ட அந்தஸ்தை பெற நடந்த ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது. இது மத்திய அரசை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமானால் மக்களவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.
எனவே காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் சபையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டிருந்தார். இதை ஏற்று சபையில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க் களில் சிலர் லோக்பால் மசோதா நிறைவேறியதும் இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று விட்டனர். அவர்களுக்கு போன் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் சட்ட திருத்த ஓட்டெடுப்பு குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
என்றாலும் நள்ளிரவு ஆகிவிட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்களில் சுமார் 20 பேர் பாராளுமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக லோக்பால் மசோதாவுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காமல் ஓட்டெடுப்பில் தோல்வி ஏற்பட்டது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் சபையில் இருந்திருந்தால் லோக்பால் மசோதாவுக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து கிடைத்து இருக்கும். எனவே ஓட்டெடுப்பு நடந்தபோது சபையில் இல்லாத எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டவிசாரணையில் சுமார் 20 காங்கிரஸ் எம்.பி.க்கள் கொறடா உத்தரவை மீறி சபையில் இருந்து வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீசு அனுப்பியுள்ளது. எம்.பி.க்கள் விளக்கம் கொடுத்த பிறகு உரிய நட வடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட போதிலும் அரசியலமைப்பு சட்ட அந்தஸ்தை பெற நடந்த ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது. இது மத்திய அரசை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமானால் மக்களவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.
எனவே காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் சபையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டிருந்தார். இதை ஏற்று சபையில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க் களில் சிலர் லோக்பால் மசோதா நிறைவேறியதும் இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று விட்டனர். அவர்களுக்கு போன் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் சட்ட திருத்த ஓட்டெடுப்பு குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
என்றாலும் நள்ளிரவு ஆகிவிட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்களில் சுமார் 20 பேர் பாராளுமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக லோக்பால் மசோதாவுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காமல் ஓட்டெடுப்பில் தோல்வி ஏற்பட்டது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் சபையில் இருந்திருந்தால் லோக்பால் மசோதாவுக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து கிடைத்து இருக்கும். எனவே ஓட்டெடுப்பு நடந்தபோது சபையில் இல்லாத எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டவிசாரணையில் சுமார் 20 காங்கிரஸ் எம்.பி.க்கள் கொறடா உத்தரவை மீறி சபையில் இருந்து வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீசு அனுப்பியுள்ளது. எம்.பி.க்கள் விளக்கம் கொடுத்த பிறகு உரிய நட வடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
ரஷியாவில் நில நடுக்கம்
மாஸ்கோ, டிச. 28-
ரஷியாவின் தென்கிழக்கில் உள்ள கிஸில் பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் தென்கிழக்கில் உள்ள கிஸில் பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.
Monday, December 19, 2011
ஜப்பானில் 10வது மாடியிலிருந்து தந்தையினால் தூக்கி வீசப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்!
ஜப்பானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து வெளியே வீசப்பட்ட குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குழந்தையை வீசிய தந்தை கைது செய்யப்பட்டார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் வசிப்பவர் ஷிங்கோ ஹஷிமோட்டோ (37). மனைவி, 4 வயதில் மகள், ஒரு வயதில் மகன் உள்ளனர். மனைவியும், மகளும் நேற்று வெளியே சென்றிருந்தனர்.
ஷிங்கோவும், ஒரு வயது குழந்தையும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது குழந்தை அழுததால் எரிச்சல் அடைந்த ஷிங்கோ பால்கனிக்கு தூக்கி வந்து அதன் கழுத்தை நெரிக்க முயன்றார். அதே வேகத்தில் குழந்தையை வெளியே வீசினார்.
10வது மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை கீழே சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த புதரில் விழுந்தது. லேசான சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
பின்பு அவரே பொலிஸிற்கு தகவலும் தெரிவித்தார். பின்பு பொலிசார் அவரை கைது செய்தனர்.
அதிக வேலைப்பளு காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் வசிப்பவர் ஷிங்கோ ஹஷிமோட்டோ (37). மனைவி, 4 வயதில் மகள், ஒரு வயதில் மகன் உள்ளனர். மனைவியும், மகளும் நேற்று வெளியே சென்றிருந்தனர்.
ஷிங்கோவும், ஒரு வயது குழந்தையும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது குழந்தை அழுததால் எரிச்சல் அடைந்த ஷிங்கோ பால்கனிக்கு தூக்கி வந்து அதன் கழுத்தை நெரிக்க முயன்றார். அதே வேகத்தில் குழந்தையை வெளியே வீசினார்.
10வது மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை கீழே சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த புதரில் விழுந்தது. லேசான சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
பின்பு அவரே பொலிஸிற்கு தகவலும் தெரிவித்தார். பின்பு பொலிசார் அவரை கைது செய்தனர்.
அதிக வேலைப்பளு காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
18வது வயதை பூர்த்தி செய்த உலகின் மிக குள்ளமான பெண்!
உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம் இன்று தான் அவர் தனது 18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மகிழ்ச்சியுடன் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange, Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள்
Saturday, December 17, 2011
நகராட்சியின் செயல்பாடுகள் - மக்கள் எண்ணம்

- எம்.ஐ. சாஹுல் ஹமீது ( சமூக ஆர்வலர்) : கீழக்கரையின் நலப் பணிகள் சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறதாக நினைக்கிறேன். சேர்மனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது, போக போக பார்க்க வேண்டும், மேலும் எங்களது 18 வது வார்டு மெம்பர் எங்கள் பகுதிகளில் மக்களுக்கான நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறார், தற்பொழுது தெரு விளக்குகள் எல்லாம் எரியும் சூழ் நிலையை ஏற்படுத்தி உள்ளார்.





+1 தேர்வில் நபிகள் பெயர் பிழையாக அச்சடிப்பு !மாணவர்கள் ஆவேசம் !
பைரோஸ் கான்ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 அரையாண்டு தேர்வு தமிழ் முதல் வினாத்தாளில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என இருந்ததால், பெரியபட்டினத்தில் முஸ்லிம் அமைப்பு மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் 18வது கேள்வியில் "அபூபக்கருடைய அன்பின் ஆற்றலும், நரிகள் நஞ்சு தீர்த்து அருளியதும்' என்ற கேள்வி இடம் பெற்றது. இதில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என பிழையாக இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சிக்கும் ஆவேசத்துக்குள்ளாகினர்.
பெரியபட்டினம் பி.எப்.ஐ., நகர் தலைவர் முகம்மது சலீம், மாவட்ட செயலாளர் அசன் அலி, எஸ்.டி.பி.ஐ.,தொகுதி தலைவர் பைரோஸ் கான் மற்றும் ஏராளமானோர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அங்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் தமிழாசிரியர் முருகனிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.
எஸ்.டி.பி.ஐ., தொகுதி செயலாளர் பைரோஸ் கான் கூறியதாவது:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், வரலாற்று சம்பவங்களை திரித்துக் கூறும் விதமாகவும் கேள்வி அமைந்துள்ளது. துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் செல்லம் கூறியதாவது: அச்சுப்பிழையால் இந்த தவறு நேர்ந்தது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி தவறை சரி செய்ய கூறியிருந்தோம். இதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பெரியபட்டினம் பி.எப்.ஐ., நகர் தலைவர் முகம்மது சலீம், மாவட்ட செயலாளர் அசன் அலி, எஸ்.டி.பி.ஐ.,தொகுதி தலைவர் பைரோஸ் கான் மற்றும் ஏராளமானோர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அங்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் தமிழாசிரியர் முருகனிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.
எஸ்.டி.பி.ஐ., தொகுதி செயலாளர் பைரோஸ் கான் கூறியதாவது:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், வரலாற்று சம்பவங்களை திரித்துக் கூறும் விதமாகவும் கேள்வி அமைந்துள்ளது. துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் செல்லம் கூறியதாவது: அச்சுப்பிழையால் இந்த தவறு நேர்ந்தது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி தவறை சரி செய்ய கூறியிருந்தோம். இதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
கண்னாடி வாப்பா அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி – கீழக்கரை நகராட்சி தலைவர் பங்கேற்றார்
தயாளகுண சீலரும், ஈ.டி.ஏ குழும மேலான்மை இயக்குனருமான அல்ஹாஜ். செய்யது சலாஹுதீன் அவர்களின் தந்தையின் நினைவாக கீழக்கரையில் நடத்தப்பட்டு வரும் கண்னாடி வாப்பா அரபிக் கல்லூரி மற்றும் மார்டன் கலாசாலை மாணவர்களுக்கு மதம் தோறும் கல்லூரி நிர்வாகம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை மற்றும் பயண செலவுக்கான பேருந்துக் கட்டன உதவி தொகை வழங்கும் விழா இன்று (15.12.2011) கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது, இதில் கலந்து கொண்ட நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா அங்கு பயிலும் 106 மாணவர்களுக்கும் இந்த மாதத்துக்கான ஊக்கத் தொகையானதலா ரூ.400 ஐ கல்லூரியின் சார்பாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஹைராத்துல் ஜலாலியா மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் , கீழக்கரை வெல்ஃபர் சங்கத்தின் மேலாளர் லியாக்கத் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்
வள்ளல் சீதக்காதி சாலை - சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு நகராட்சி தலைவர் கோரிக்கை.
கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை ( மெயின் ரோடு) மேம்படுத்த நகராட்சி முயற்சி செய்து வருகிறது, இதற்கான தீர்மானமும் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது, கீழக்கரையின் சாலை பணிகளுக்கான நிதி புதிதாக இன்னும் ஒதுக்கீடு செய்யாததாலும், மக்களின் பயனுக்காக தரமான சாலையை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் நேற்று 15.12.2011 அன்று கீழக்கரை நகராட்சி தலைவர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு பால்ராஜை இராமநாதபுரத்தில் நேரில் சந்தித்து கீழக்கரையின் பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை சீரமைக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்துள்ளார், தேவையான நடவடிக்கையை உடனே எடுப்பதாய் கோட்டப் பொறியாளரும் உறுதி அளித்துள்ளார்
Friday, December 16, 2011
அணை பிரச்சினை குறித்து தமிழக– கேரளா முதலமைச்சர்கள் பேச வேண்டும்– கலாம் யோசனை
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட தமிழக, கேரள முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சைனிக் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநிலங்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நல்லுறவு, அணை பிரச்னையால் பாதிக்கப்படக் கூடாது' என்றார்.
முல்லை பெரியாறு அணை குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் நேரில் பேசி, சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு முதலமைச்சர்கள் பேசும் போது, அணையின் பாதுகாப்பு, செலவு, பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
முதல்வர்கள் அளவில், அமைச்சர்கள் அளவில், செயலர்கள் அளவில் என ஏற்கெனவே நூற்றுக்கணக்கான சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடத்தி, தொடர்ந்து கேரளா விஷமத்தனமாக நடந்து கொண்டதால், உச்சநீதி மன்றம் போய் தமிழகம் தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்ற நிலையில், மீண்டும் பேச்சு வார்த்தை என கலாம் யோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வள்ளல் சீதக்காதி சாலை - சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு நகராட்சி தலைவர் கோரிக்கை.
கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை ( மெயின் ரோடு) மேம்படுத்த நகராட்சி முயற்சி செய்து வருகிறது, இதற்கான தீர்மானமும் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது, கீழக்கரையின் சாலை பணிகளுக்கான நிதி புதிதாக இன்னும் ஒதுக்கீடு செய்யாததாலும், மக்களின் பயனுக்காக தரமான சாலையை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் நேற்று 15.12.2011 அன்று கீழக்கரை நகராட்சி தலைவர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு பால்ராஜை இராமநாதபுரத்தில் நேரில் சந்தித்து கீழக்கரையின் பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை சீரமைக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்துள்ளார், தேவையான நடவடிக்கையை உடனே எடுப்பதாய் கோட்டப் பொறியாளரும் உறுதி அளித்துள்ளார்
Wednesday, December 14, 2011
திருமன நிகழ்ச்சிகளில் ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் - பொது மக்களுக்கு நகராட்சி தலைவர் கோரிக்கை
ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சமீபத்தில் கீழக்கரை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்த தடை வரும் ஃபிப்ரவரி 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது, இதை தொடர்ந்து கீழக்கரை நகராட்சி தலைவர் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோள் பின் வருமாறு:
கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, மேலும் நமது ஊரில் ப்ளாஸ்டிக் குப்பைகள் கழீவு நீர் பாதைகளை அடைத்துக் கொண்டும், சாலை ஓரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும், இந்த குப்பைகளை எரிக்கும் போது வெளிவரும் நச்சு வாயு கடுமையான சுகாதாரப் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.மேலும் பிளாஸ்டிக் மக்குவதற்கு 10 இலட்சம் ஆண்டுகள் வரை கூட எடுக்கின்றது, இந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மண்ணில் புதைவதால் மழை நீர் நிலத்தில் இறங்குவதை தடுக்கின்றது.ப்ளாஸ்டிக் பொருட்களில் அடங்கியுள்ள பைபீனால்-ஏ, காலேட்டுகள் மற்றும் டயாக்சீன்கள் மிகவும் கேடு விளைவிக்கக்கூடியவையாக கருதப்படுகிறது. ஆகவே இதனை தடை செய்வதற்கான தீர்மானம் நகராட்சியால் கொண்டு வரப்பட்டு வரும் ஃபிப்ரவரி 2 முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் நமது ஊரில் டிசம்பரில் அதிகமான திருமன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் , இந்த நிகழ்ச்சிகளில் பளாஸ்டிக் பைகள் மற்றும் பளாஸ்டிக் வாழை இலைகள் போன்ற பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகிறேன், அது போல கீழக்கரையில் கட்டுமான வேலைகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது, இதற்கான கட்டுமான பொருட்கள், மணல் ஆகியவை சாலையோரங்களில் கொட்டப்பட்டு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது, அப்படியான இடங்களில் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்
கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, மேலும் நமது ஊரில் ப்ளாஸ்டிக் குப்பைகள் கழீவு நீர் பாதைகளை அடைத்துக் கொண்டும், சாலை ஓரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும், இந்த குப்பைகளை எரிக்கும் போது வெளிவரும் நச்சு வாயு கடுமையான சுகாதாரப் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.மேலும் பிளாஸ்டிக் மக்குவதற்கு 10 இலட்சம் ஆண்டுகள் வரை கூட எடுக்கின்றது, இந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மண்ணில் புதைவதால் மழை நீர் நிலத்தில் இறங்குவதை தடுக்கின்றது.ப்ளாஸ்டிக் பொருட்களில் அடங்கியுள்ள பைபீனால்-ஏ, காலேட்டுகள் மற்றும் டயாக்சீன்கள் மிகவும் கேடு விளைவிக்கக்கூடியவையாக கருதப்படுகிறது. ஆகவே இதனை தடை செய்வதற்கான தீர்மானம் நகராட்சியால் கொண்டு வரப்பட்டு வரும் ஃபிப்ரவரி 2 முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் நமது ஊரில் டிசம்பரில் அதிகமான திருமன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் , இந்த நிகழ்ச்சிகளில் பளாஸ்டிக் பைகள் மற்றும் பளாஸ்டிக் வாழை இலைகள் போன்ற பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகிறேன், அது போல கீழக்கரையில் கட்டுமான வேலைகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது, இதற்கான கட்டுமான பொருட்கள், மணல் ஆகியவை சாலையோரங்களில் கொட்டப்பட்டு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது, அப்படியான இடங்களில் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்
Subscribe to:
Posts (Atom)