Saturday, December 17, 2011
வள்ளல் சீதக்காதி சாலை - சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு நகராட்சி தலைவர் கோரிக்கை.
கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை ( மெயின் ரோடு) மேம்படுத்த நகராட்சி முயற்சி செய்து வருகிறது, இதற்கான தீர்மானமும் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது, கீழக்கரையின் சாலை பணிகளுக்கான நிதி புதிதாக இன்னும் ஒதுக்கீடு செய்யாததாலும், மக்களின் பயனுக்காக தரமான சாலையை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் நேற்று 15.12.2011 அன்று கீழக்கரை நகராட்சி தலைவர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு பால்ராஜை இராமநாதபுரத்தில் நேரில் சந்தித்து கீழக்கரையின் பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை சீரமைக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்துள்ளார், தேவையான நடவடிக்கையை உடனே எடுப்பதாய் கோட்டப் பொறியாளரும் உறுதி அளித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment