கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, December 28, 2011

கூடங்குளம் மக்கள் இந்தியா வந்திருக்கும் ஜப்பான் பிரதமருக்கு கோரிக்கை



கூடங்குளம் டிச 28-

கூடங்குளம் மக்கள் இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிகிகோவுக்கு ஒரு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர் அதன் நகலை இன்று பத்திரிகையாளர்களிடம் காட்டினர் அதில் இந்தியாவுடன் ஜப்பான் சிவில் அணு ஒப்பந்த ஒத்துழைப்பு வைத்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் அதில் நாங்கள் ஜப்பான் மக்களுக்கு மதிப்பளிக்கிறோம் அவர்கள் அயரத உழைப்பும் கடமை உணர்வும் மிக்கவர்கள்.இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட ஜப்பான் நிறுவனக்கள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் நாடு ஜப்பான் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் உறவுகளை மதிக்கிறது.நாங்கள் நிச்சயமாக சிவில் அணு ஒத்துழைப்புக்கு ஜப்பான் மற்றும் யாருனும் வைப்பதற்கு பாராட்ட மாட்டோம் என கூறி உள்ளனர்

No comments:

Post a Comment