Saturday, December 17, 2011
கண்னாடி வாப்பா அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி – கீழக்கரை நகராட்சி தலைவர் பங்கேற்றார்
தயாளகுண சீலரும், ஈ.டி.ஏ குழும மேலான்மை இயக்குனருமான அல்ஹாஜ். செய்யது சலாஹுதீன் அவர்களின் தந்தையின் நினைவாக கீழக்கரையில் நடத்தப்பட்டு வரும் கண்னாடி வாப்பா அரபிக் கல்லூரி மற்றும் மார்டன் கலாசாலை மாணவர்களுக்கு மதம் தோறும் கல்லூரி நிர்வாகம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை மற்றும் பயண செலவுக்கான பேருந்துக் கட்டன உதவி தொகை வழங்கும் விழா இன்று (15.12.2011) கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது, இதில் கலந்து கொண்ட நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா அங்கு பயிலும் 106 மாணவர்களுக்கும் இந்த மாதத்துக்கான ஊக்கத் தொகையானதலா ரூ.400 ஐ கல்லூரியின் சார்பாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஹைராத்துல் ஜலாலியா மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் , கீழக்கரை வெல்ஃபர் சங்கத்தின் மேலாளர் லியாக்கத் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment